search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே மந்திரி"

    • ஆந்திர மாநிலத்தில் 2 ரெயில்கள் மோதிய விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
    • ரெயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம்.

    திருப்பதி:

    ஆந்திரப் மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஹவுரா-சென்னை வழித்தடத்தில் ராயகடா பயணிகள் ரெயில், விசாகப்பட்டினம் பலாசா ரெயிலில் பின்னால் இருந்து மோதியது.

    இதில் 14 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த கோரமான ரெயில் விபத்து தென்னிந்தியாவையே உலுக்கியது.

    இந்த நிலையில் இந்திய ரெயில்வே செய்து வரும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் 2 ரெயில்கள் மோதிய விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் விபத்து ஏற்படுத்திய ஒரு ரெயிலின் டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் கிரிக்கெட் போட்டியை செல்போனில் பார்த்து கொண்டிருந்தனர். இதனால் கவனச் சிதைவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது.

    இப்போது இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து, உறுதிசெய்யும் அமைப்புகளை நிறுவி வருகிறோம். ரெயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம்.

    "நாங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூல காரணத்தைக் கண்டறிய முயற்சிப்போம், அது மீண்டும் நடக்காமல் இருக்க நாங்கள் ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம். ஆந்திர ரெயில் விபத்துக்கு காரணமான 2 ஊழியர்களும் அதில் பலியாகி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகிலேயே அதிகமான ரெயில் நிலையங்களை இந்தியா கொண்டுள்ளது.
    • அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒரே மாதிரியான பெயர் பலகைகள் வைக்கப்படும் என்றார் ரெயில்வே மந்திரி.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பெயர் பலகைகள் மற்றும் அடையாள சின்னங்களை ஒரே மாதிரியாக வைப்பது தொடர்பான புத்தக கையேட்டை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    உலகிலேயே அதிகமான ரெயில் நிலையங்களை இந்தியா கொண்டுள்ளது. பெண்கள், முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் எளிதில் அடையாளம் காணும் வகையில், பெயர் பலகைகளையும், அடையாள சின்னங்களையும் ஒரே மாதிரி இடம்பெற செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வண்ணம், எழுத்தின் அளவு, உருவங்கள் என அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு வசதியான அடையாள சின்னங்களை வைப்போம். எளிமையான வார்த்தைகள், தெளிவாக தெரியும் நிறம் ஆகியவற்றை பின்பற்றுவோம். மூவர்ணத்தின் பின்னணியில் ரெயில் நிலைய பெயரை குறிப்பிடும் புதிய பலகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்தார்.

    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, இரு பகுதி மக்களிடையே உறவுகளை வலுப்படுத்தும்.
    • வாரணாசி ரெயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்ததாக மறுசீரமைக்கப்படுகிறது.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்புத் திட்டப் பணிகளை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், உலகத் தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக இது மறுசீரமைக்கப்படுகிறது என்றும், உலகிலேயே சிறந்த ரெயில் நிலையங்களில் ஒன்றாக இதை மாற்றும் வகையில் சுமார் 7000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் தெரிவித்தார்.

    பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் தூங்கும் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். பின்னர் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகப் பிரதிநிதிகள் குழுவினருடன் மந்திரி வைஷ்ணவ் கலந்துரையாடினார். இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினர் அவருடன் பகிர்ந்து கொண்டனர்.

    காசி தமிழ் சங்கமம் நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய ரெயில்வே அமைச்சகம் மற்றும் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக குழுவினரின் முயற்சிகளை மந்திரி பாராட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் வாரணாசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார். இதுபோன்ற பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கி, இரு பகுதி மக்களிடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • சென்னை- திருச்செந்தூர் ரெயில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
    • மத்திய இணை மந்திரி முருகன் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை.

    மேட்டுப்பாளையம்-கோவை இடையே வாரத்தின் ஆறு நாட்கள் மட்டுமே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அந்த ரெயில் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

    இதனையடுத்து மத்திய இணை மந்திரி எல் முருகன், ரெயில்வே துறை அமைச்சகத்திற்கு எழுதியிருந்த கடிதத்தில், மேட்டுப்பாளையம்-கோவை ரெயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று ஏராளமான பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய பதில் கடிதத்தில். கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டதாகவும், வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வந்த மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில் இனி தினசரி இயக்கப்படும் என்றும், சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ரெயில்வே அமைச்சரின் அறிவிப்பை அடுத்து, வரும் 4ந் தேதி முதல் மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில் வாரம் முழுவதும் இயக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

    • மயிலாடுதுறையை சுற்றி முக்கிய வழிபாட்டுத்தலங்கள் உள்ளன.
    • மத்திய மந்திரி முருகன் கோரிக்கையை ஏற்று ரெயில்வே மந்திரி நடவடிக்கை

    பயணிகள் வசதிக்காக மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடைகள் அமைக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு இணை மந்திரி முருகன் ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அதில்,மயிலாடுதுறையை சுற்றி கும்பகோணம், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. குறிப்பாக மாயுராணந்த சுவாமி கோவில், ஸ்ரீ வாதனேஷ்வர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம், சூரியனார் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், ஆலங்குடி போன்ற வழிபாட்டுத் தலங்கள் இருப்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள், பயணிகள் நாள்தோறும் ரெயில்கள் மூலம் மயிலாடுதுறை வழியாக இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    குறிப்பாக பெண்கள், முதியவர்கள் பலர் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடைகள் இரண்டு அமைக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் மந்திரி முருகன் வலியுறுத்தியிருந்தார்.

    அந்தக் கடிதத்திற்கு பதிலளித்துள்ள ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ண்வ், தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இரண்டு எஸ்கலேட்டர்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர் எதிர்காலத்தில் இந்தியாவில் 400 வந்தே பாரத் ரெயில்கள் இருக்கும் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    47 ரெயில் நிலையங்களுக்கான டெண்டர் விடும் பணிகள் முடிவடைந்த நிலையில், 32 ரெயில் நிலையங்களில் பணிகள் தொடங்கியுள்ளன.

    200 ரெயில் நிலையங்களை சீரமைக்க அரசு பெரிய திட்டம் வகுத்துள்ளது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள், காத்திருப்பு ஓய்வறைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

    எதிர்காலத்தில் இந்தியாவில் 400 வந்தே பாரத் ரெயில்கள் இருக்கும். அவற்றில் 100 ரெயில்கள் மராத்வாடாவின் லத்தூரில் உள்ள பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.

    பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் நெடுஞ்சாலைகள் அல்லது ரெயில்வே மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. மராத்வாடாவின் சில பகுதிகளும் இணைக்கப்படும் என தெரிவித்தார்.

    • ஐதராபாத் - சென்னை ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்.
    • லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக மாற்ற வேண்டும்.

    கன்னியாகுமரி:

    மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது குமரி மாவட்ட மக்களின் நெடுநாள் தேவைகளை கோரிக்கையாக அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

    நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு தினசரி ரெயில், சென்னை தாம்பரம் விரைவு ரெயிலை தினசரி ரெயில் சேவையாக மாற்றுவது, ஐதராபாத் - சென்னை ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது என புது ரெயில்களின் தேவையை எடுத்துரைத்தார்.

    ரெயில் நிலையங்களின் கட்டுமான மேம்பாடு குறித்தும் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். குறிப்பாக லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக மாற்ற வேண்டும்.

    மேலும் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகளை துரிதமாக முடிப்பதற்கு அரசாங்கம் தரப்பில் ஆவன செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 5,882 ரெயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • சில ரெயில்களில் பயணிகளுக்கு உதவ அடிப்படை மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது:

    ரெயில்வே பாதுகாப்புப் படை, பயணிகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரெயில்வே மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி ரெயில்களில், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரெயில் பயணிகளுக்கான பாதுகாப்புத் தொடர்பான உதவி எண் 139, 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட ரெயில் பெட்டிகளில், ஆண் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சமூக ஊடகங்கள் மூலம் ரெயில்வே, பயணிகளுடன் தொடர்பில் உள்ளது. 5,882 ரெயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு உதவும் வகையில் சில ரெயில்களில் அடிப்படை மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ரெயில் நிலையங்களை மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் ஆகியவற்றுடன் நவீனப்படுத்துவதும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆன்லைன் மூலம்,பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போதே உணவுக்கான ஆர்டரையும் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு தரமான சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், ரெயில் நிலையங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி எந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நாகர்கோவில் டவுண் வழியாக இயக்க எதிர்ப்பு
    • ரெயில்வே மந்திரிக்கு கடிதம்

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில், நெல்லை வழியாக சென்னைக்கு குருவாயூர் ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோல் மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.


    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் என்ஜின் மாற்றுவதற்கு சுமார் 40 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்கள் வரை ஆகும்.எனவே இந்த ரெயிலை நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வராமல் பைபாஸ் வழியாக அதாவது நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதனால் 40 நிமிடங்கள் வரை பயண நேரம் மிச்ச மாகும் என்றும் தெரிவி க்கப்பட்டுள்ளது. அதன்படி அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம்போல்இரவு 8.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். ஆனால் காலை 9 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வருவதற்குப் பதிலாக இனி 8.05 மணிக்கு நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

    தொடர்ந்து காலை 10.35 மணிக்கு திருவனந்தபுரம் செல்வதற்கு பதிலாக 9.30 மணிக்கே திருவனந்தபுரம் சென்று 9.35 மணிக்கு அங்கிருந்து புறப்படும். பகல் 12.10 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    இதே போல் மறுமார்க்க த்தில் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு மாலை 3 மணிக்கு பதிலாக 3.40 மணிக்கு புறப்படும். பின்னர் 6.10 மணிக்கு நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும். இந்த ரெயில் தற்போது 5.45 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு நிலையத்திற்கு வந்து 5.55 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறது.

    ரெயில்வே வாரியம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ள நிலையில் விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ கால அட்டவணை அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பி னரும் கடும் எதிர்ப்பு தெரி வித்து உள்ளனர்.ரெயில் பயணிகள் சங்கத்தினர் வழக்கம் வழக்கம்போல் இந்த ரயில் இயக்க வேண்டும் இந்த ரயிலை டவுண் ரெயில் நிலையம் வழியாக இயக்குவதால் சுற்றுலா பயணிகள், பாதிக்கப்படக் கூடிய சூழல் ஏற்படும் என்று கூறி உள்ளனர்.

    இதேபோல் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ரெயில்வே மந்திரிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் சந்திப்புக்கு வராமல் நாகர்கோவில் டவுணுக்கு செல்வதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை வழக்கம்போல் நாகர்கோவில் சந்திப்பு நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறுகையில், கேரள ரெயில்வே கோட்டத் துடன் குமரி மாவட்டம் உள்ளதால் நமது மாவட்டட மக்களை புறக்கணிக்கிறார் கள். குமரி மாவட்டத்தை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் புதிய கோட்டம் உருவாக்க வேண்டும். 40 நிமிடம் முன் கூட்டி செல்கிறது என்பதற் காக ஆயிரக்கணக்கான மக்களின் ரெயில் பயண பயன்பாட்டை தடுத்து நிறுத்தக்கூடாது. வழக்கம்போல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், மேயரு மான மகேஷ கூறுகையில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுண் ரெயில் நிலையம் வழியாக இயக்க ப்படும் என்ற அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும். இல்லா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    ×